எனது வேண்டுதலும் இறைவனின் உதவியும்
வாழ்க்கையில் முதன் முதலாக இறைவனின் முன்பு முழங்காலிட்டு அமர்ந்தேன். கைகளை உயர்த்தி, மனதில் இறைவனை வேண்டினேன். “இறைவன் என்று ஒருவன் உண்மையில் இருந்தால், உண்மையான அந்த இறைவனே! எனது மகளைக் காப்பாற்றுவீராக!” உள்ளத்தை ஒருமைப்படுத்தி வேண்டிய அத்தருணத்தில் என்னையும் அறியாமல் அழுகை பீறிட்டது. கதறி அழுதேன்.கடைசியில் என் மனதில் சொன்னேன். என் மகளைக் காப்பாற்றினால், இறைவனே! உமக்காக என்னை அர்ப்பணிப்பேன்.
இப்படியே பதினைந்து நிமிடங்கள் கழிந்திருந்தன. மீண்டும் நினைவுக்கு வந்தேன். பிரார்த்தனை அறையை விட்டு வெளியேறி எனது மகளின் சிகிச்சை அறைக்கு வந்தேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னை எதிர்பார்த்திருந்த சிறப்பு மருத்துவ நிபுணர் என்னிடம் கேட்டார். எங்கே சென்றிருந்தீர்கள் லாரன்ஸ் ? உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தோம். உங்கள் மகளின் இருதய அடைப்பு சரியாகி விட்டது.
மருத்துவர், மருத்துவ அடிப்படையில் அதற்கு சில விளக்கங்கள் தந்தார். எனினும் என்னைப் பொருத்தவரை எனது வேண்டுதலுக்கு இறைவன் பதிலளித்துள்ளார் என்றே நம்பினேன். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்பு, இரண்டு வருடத்திற்குள் அறுவை சிகிச்சையோ, மருந்து மாத்திரைகளோ இன்றி முழுமையாக குணமடைந்தாள் எனது மகள். மற்ற குழந்தைகளைப் போன்று நன்கு வளரவும் செய்தாள்.
வாழ்க்கையில் முதன் முதலாக இறைவனின் முன்பு முழங்காலிட்டு அமர்ந்தேன். கைகளை உயர்த்தி, மனதில் இறைவனை வேண்டினேன். “இறைவன் என்று ஒருவன் உண்மையில் இருந்தால், உண்மையான அந்த இறைவனே! எனது மகளைக் காப்பாற்றுவீராக!” உள்ளத்தை ஒருமைப்படுத்தி வேண்டிய அத்தருணத்தில் என்னையும் அறியாமல் அழுகை பீறிட்டது. கதறி அழுதேன்.கடைசியில் என் மனதில் சொன்னேன். என் மகளைக் காப்பாற்றினால், இறைவனே! உமக்காக என்னை அர்ப்பணிப்பேன்.
இப்படியே பதினைந்து நிமிடங்கள் கழிந்திருந்தன. மீண்டும் நினைவுக்கு வந்தேன். பிரார்த்தனை அறையை விட்டு வெளியேறி எனது மகளின் சிகிச்சை அறைக்கு வந்தேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னை எதிர்பார்த்திருந்த சிறப்பு மருத்துவ நிபுணர் என்னிடம் கேட்டார். எங்கே சென்றிருந்தீர்கள் லாரன்ஸ் ? உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தோம். உங்கள் மகளின் இருதய அடைப்பு சரியாகி விட்டது.
மருத்துவர், மருத்துவ அடிப்படையில் அதற்கு சில விளக்கங்கள் தந்தார். எனினும் என்னைப் பொருத்தவரை எனது வேண்டுதலுக்கு இறைவன் பதிலளித்துள்ளார் என்றே நம்பினேன். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்பு, இரண்டு வருடத்திற்குள் அறுவை சிகிச்சையோ, மருந்து மாத்திரைகளோ இன்றி முழுமையாக குணமடைந்தாள் எனது மகள். மற்ற குழந்தைகளைப் போன்று நன்கு வளரவும் செய்தாள்.
No comments:
Post a Comment